search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரணாசி தொகுதி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை.
    • இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எங்களுக்கு நாட்டில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.

    உத்தரபிரதேசத்தின் நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பைச் சேர்ந்த திருநங்கை மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி (46). துறவியான அவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்து மதத்தை பரப்பி வருகிறார்.

    இந்த சூழலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து அகில பாரத மகா இந்து சபையின் வேட்பாளராக மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி போட்டியிடுகிறார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை. திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக அரசியலில் களமிறங்கி உள்ளேன். திருநங்கைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் திருநங்கைகள் நலனுக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு விளம்பரம் செய்வதில்லை.

    இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எங்களுக்கு நாட்டில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளர்களாக அறிவிப்பது இல்லை. அகில இந்து மகா சபை என்னை வேட்பாளராக அறிவித்து நாட்டுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை மற்ற கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி தெரிவித்தார்.

    • வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரதமர் மோடி ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
    • பிரதமர் மோடி சுற்றுப் பயணத்தின் போது, ​​கங்கை நதியில் நடைபெறும் பிரமாண்ட கங்கா ஆரத்தியையும் காண இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் தேசியக்கட்சிகள் தற்போது முதலே அதற்கான நடவடிக்கைகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இருந்து புனித தலத்துக்குச் சென்று 'மிஷன் -2024' என்ற ரீதியில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறார்.

    இதற்காக பிரதமர் மோடி வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வாரணாசியில் சுற்றுப்பயணம் செய்கிறார். வருகிற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காசிக்கு வரக்கூடிய அவர், தனது பாராளுமன்றத் தொகுதியில் இரவு தங்குகிறார். மறுநாள் திங்கட்கிழமை கட்சி மற்றும் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார்.

    வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரதமர் மோடி ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து வாரணாசி கோட்ட ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா கூறுகையில், பிரதமர் மோடி காசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன் தொடர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார் என்றார்.

    அதேபோல் காசி தமிழ் சங்கமம், உலகின் மிகப் பழமையான கலாச்சார பாரம்பரியத்தின் வாழ்க்கைப் பிணைப்புகளை புதுப்பிக்க மத்திய கல்வி அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சகம், கலாச்சாரம், ஜவுளி, ரெயில்வே போன்ற பிற துறைகளுடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த காசி தமிழ்ச் சங்கமத்தில், இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கிடையேயான வரலாற்று மற்றும் குடிமைத் தொடர்பின் பல பகுதிகள் கலாச்சார மரபுகளை நெருக்கமாக கொண்டு, பகிர்வு பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகின்றன.

    காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள பழமையான தொடர்புகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் இரண்டாம் கட்ட விழா வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. அதிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் என்றார்.

    மேலும் பிரதமர் மோடி இந்த சுற்றுப் பயணத்தின் போது, கங்கை நதியில் நடைபெறும் பிரமாண்ட கங்கா ஆரத்தியையும் காண இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளில், கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு சின்னங்களுக்கு இடையேயான விக்சி பாரத் சங்கல்ப் யாத்ரா கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

    மோடி வருகையையொட்டி வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு வருகிற 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
    • அடிக்கல் நாட்டு விழாவில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், கபில்தேவ், தெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.

    வாரணாசி:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி ஆன்மீக சிறப்பு பெற்றது. பிரதமர் மோடியின் தொகுதியான இங்கு மற்றொரு சிறப்பு அம்சமாக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் உருவாக உள்ளது.

    வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு வருகிற 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, பிளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், வி.ஐ.பி. ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் அமைய உள்ளது.

    இந்த மைதானம் குறித்து உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க இயக்குநர் யுத்வீர் சிங் கூறுகையில், வருகிற 2025-ம் ஆண்டு முதல் காசி மக்கள் இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம் என்றார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் தீவிர பங்கேற்புடன் இந்த மைதானம் அமைய உள்ளது.

    அடிக்கல் நாட்டு விழாவில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், கபில்தேவ், தெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். மேலும், நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு ரூ.120 கோடி வரையில் செலவு செய்துள்ளது.

    இந்த மைதானம் சிவனின் தலையில் சூடியிருக்கும் பிறை போலவும், நுழைவு பகுதி உடுக்கை போன்றும், மின் விளக்கு கம்பங்கள் சூலாயுதம் போலவும் அமைக்கப்பட உள்ளன.

    ×